திங்கள், 7 செப்டம்பர், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 78


ஒருவருக்குத் தாங்க முடியாத பசி. அந்தப் பசி எப்படி இருக்கிறது என்றால் ஆறாத வெந்நீர் எப்படிச் சுடுமோ அது போன்று தாங்க முடியாத பசி. அப்படிப் பசி இருக்கும் போது அவர் என்ன செய்ய வேண்டும்? யாரிடமாவது சொல்லலாமா? அப்படிச் சொல்வதென்றால் யாரிடம் சொல்வது? இவற்றுக்கு மிக அழகாக விடையளிக்கிறது இப்பாடல். 


ஆறாத வெந்நீர் சுடும்படி பசித்தாலும் ஒருவர் அதனைப் பொருத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், தங்களது இல்லாமையை தீர்க்க வல்ல நல்ல பண்பாளர்களிடம் உரைக்க வேண்டும். தங்களது குறையைக் களைய மனமற்ற பண்பு இல்லாதவரிடம், இல்லாமையைக் கூறாமல் இருப்பதே நல்லது.

பாடல்:
வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க - அற்றம்
மறைக்குந் துணையார்க் குரைப்பவே தம்மைத்
துறக்குந் துணிவிலா தார்.

பதம் பிரித்த பாடல்:
வற்றி, மற்று ஆற்றப் பசிப்பினும், பண்பு இலார்க்கு
அற்றம் அறிய உரையற்க! அற்றம்
மறைக்கும் துணையார்க்கு உரைப்பவே, தம்மைத்
துறக்கும் துணிவு இலாதார்.

அருஞ்சொற்பொருள்:
வற்றி - நீர் சுட வைக்கும் பொழுது வற்றுதல், பசியால் மெலிதல்
ஆற்ற - மிகுந்த
அற்றம் - இல்லாமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக