புதன், 9 செப்டம்பர், 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 79

எவை நன்றாக முடிகிறதோ அவை நன்றே (All is well that ends well) என்ற ஆங்கிலப் பொன் மொழியை நீங்கள்கேட்டிருக்கலாம். ஒரு செயலின் பயன் நன்மையில் முடியும் என்றால், அதன் வழி எவ்வழியானாலும் சரியா? நன்மையாஇல்லையா என்பது முடிவில் தான் தெரியும் என்றால், நன்மை கட்டாயம் வரும் என்பது உறுதியில்லை அல்லவா?அப்படியென்றால், செல்கின்ற வழியும் நல்லதாக இருக்க வேண்டாமா? ஒருவர் இன்பம் அடைவதற்கு பல வழிகள்இருக்கலாம். எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது? பாடலின் விளக்கத்தைப் பார்க்கலாம்.



ஓங்கி உயர்ந்த மலையில் இருந்து விழும் அருவிகளைக் கொண்ட நாட்டைச் சேர்ந்தவனே! இழிவு வந்தாலும் இன்பம்உண்டான காரணத்தால் அதன் பக்கம் இருக்கின்றவனே, இன்பம் தொடர்ந்து அமையும் என்றாலும், உலகம் பழிக்காதவழியில்லை என்றால் அது பயணிக்கத் தக்கது அல்ல. இன்பம் இல்லையென்றாலும், பழி இல்லாத பாதையே சிறந்த பாதை

பாடல்:
இன்பம் பயந்தாங் கிழிவு தலவைரினும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம்
ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட !
பழியாகா ஆறே தலை.

பதம் பிரித்த பாடல்:
இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும்,
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க! இன்பம்
ஒழியாமை கண்டாலும்-ஓங்கு அருவி நாட!-
பழி ஆகா ஆறே தலை.

அருஞ்சொற்பொருள்:
பயந்து - உண்டாகி
ஆறே - வழியே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக