வியாழன், 5 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு ‪‎நாலடியார்‬: பாடல் 1

ஒரு செல்வந்தர் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் அவருடைய இணையாள் (மனையாள்) அமர்ந்து அறுசுவைகளான கசப்பு, உவர்ப்பு, இனிப்பு துவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு என்பவற்றைக் கொண்டு சமைக்கப்பட்ட உணவினை அன்பு மிகுதியால் வழங்குகிறார். செல்வ மிகுதியால் நன்கு உண்டு வாழும் அச்செல்வந்தர் ஒரு உருண்டை (கவளம்) உணவு போதும் மறு உருண்டை வேண்டாம் என்று கூறுகிறார். அவ்வாறு செழிப்புடன் வாழ்கிறார்.
திடீரென நிலை மாறுகிறது. தனது செல்வத்தை இழக்க நேரிடுகிறது. அவர் ஒரு சுவை கொண்ட கூழ் ஒரு கவளமாவது கிடைக்குமா என்று ஏங்குகிறார். மற்றவரிடம் பிச்சை கேட்கும் நிலை ஏற்படுகிறது. ஓர் இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு செல்வதால் செல்வம் என்றனரோ என்றெண்ணத் துவங்குகிறார். இவ்வாறு நிலை மாறுவதால் செல்வம் நிலையானது அல்ல என்பது அவருக்குப் புலப்படுகிறது.
இதனைத் தான் நமக்கு நாலடியார் முதல் பாடல் நமக்கு விளக்குகின்றது.
பாடல்:
அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின் செல்வம்ஒன்
றுண்டாக வைக்கற்பாற் றன்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக