வியாழன், 5 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு ‪நாலடியார்‬ : பாடல் 4


ஓடி ஆடி விளையாடுகிறது ஒரு சின்னக் குழந்தை. சிறிது காலம் கடக்கிறது. பள்ளிப் பருவம் முடிகிறது. பின்பு பதின்மப் பருவம், கல்லூரிப் பருவம் என்று ஒவ்வொரு பருவம் வந்து முடிகிறது. இவ்வாறாக நிற்காமல் ஆயுள் மற்றும் வாழ்நாள் ஓடிக்கொண்டிருக்கிறது. பின் சிறிது காலத்தில் சினத்துடன் வரும் எமன் வந்து உடலைச் சார்ந்திருந்த உயிர் பிரிகிறது.
காலமும் நம் ஆயுளும் நிற்காமல் தொடர்வது போல் நம்மிடம் நிலைத்திருக்கும் என்று நாம் நினைக்கும் பொருட்கள் நம்மிடமிருந்து பிரிவது இயல்பு. இதனைப் புரிந்து உணர்ந்துகொண்டு நமக்கு பொருத்தமான நற்செயல்களை விரைவாக செய்யத் துவங்கி, அவற்றை செய்து முடிக்கவேண்டும்.
இதனை ஓசை நயத்துடன் விளக்குகிறது நாலடியார் பாடல் 4.
பாடல்:
நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்
தொன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.

அருஞ்சொற்பொருள்:
ஒன்றின: பொருந்திய
வல்லே: விரைவாக
செறுத்து: சினம், கோபம்
கூற்று: எமன்


2 கருத்துகள்: