திங்கள், 16 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார்: பாடல் 12


இனிமையான காற்று. இதமான அலையோசை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர். ஆழம் அறிய போட்ட கல் அடிச் சேர அதிக நேரம் ஆனது. அவ்வகை ஆழம் மிகுந்த கடலில் மரக்கலம் ஒன்று மிதந்து வந்தது. சிறிது நேரத்துக்குள் அந்த எதிர்பாராத நிகழ்வு நடந்தது. அந்த மரக்கலம் ஆழ்கடலில் மூழ்கியது. 

இக்காட்சியைப்போல் நம் வாழ்விலும் நிகழ்வு ஏற்படலாம். எப்பொழுது? உள் மனத்திள் சிந்தனை செய்தால் நமக்குப் புரியும்.

நம் வாழ்வின் இனிமைக்கு முக்கியமானதாக மூன்று அம்சங்களைக் கூறலாம்; நட்பு, பெரியவர்களின் துணை மற்றும் பொதுமக்களின் அன்பு. நமக்குத் தேவை ஏதாவது வரும்பொழுது நாம் நாடுவது நம் நண்பர்களை. சாண்றோர்கள் அருகில் இருந்தால் அறிவுரை சொல்லி நம் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பொதுமக்களின் அன்பு இருந்தால் நம் வாழ்வு எந்நிலை அடைந்தாலும், நமக்கு பக்கபலமாக அந்த அன்பு அமையும். இவ்வாறான மூன்றும், நாம் நம் இளமையில் செய்யத்தக்க செயல்களை செய்யாமல் போனால், நம்மைவிட்டு விலகும். இதனைத்தான் ஆழ்கடலில் மூழ்கிய மரக்கலத்திற்கு ஒப்பிட்டனர் நம் முன்னோர்.

பாடல்:

நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன - உட்காணாய்;
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி.

அருஞ்சொற்பொருள்:

அற்றன - அற்றுப்போயின - முறிந்து போவது
அஃகினார் - அணுக்கங் குறைந்தனர்
- அணுக்கம் - நெருக்கம்
அற்பு - அன்பு
தளை - கட்டு
ஆழ்கலம் - ஆழ்கடலில் மூழ்கிய கலம்
கலி-துன்பம்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக