திங்கள், 16 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 20



நாம் நம் வாழ்நாளில் பலவற்றை சேர்த்து வருகிறோம். நிதி, வீடு, நிலம், நல்ல நண்பர்கள், நல்ல நூல்கள் - இது போன்று பல. இவை தவிர மிகவும் முக்கியமான ஒன்று சேர்க்கின்றோமா என்று நம் முன்னோர் வினவுகின்றனர். அது என்னவாக இருக்கும்? அதனை நாம் ஏன் சேர்க்க வேண்டும் என்று விரும்பினர்?  அனைத்து சேமிப்பை விடவும் மிகச் சிறந்த சேமிப்பு நாம் செய்த நற்செயல்களின் சேமிப்புதான் என்கின்றனர். அவ்வாறு சேர்த்தால் தான் நமக்கான அடுத்த பிறப்பில் நன்மை விளையும் என்று நம்பினர். அதுவும் அந்த சேமிப்பை செய்வதற்கு காலம் தாழ்த்தாமல் இளமைக் காலதிலேயே செய்துவிடவேண்டும் என்றனர்.

சேமிக்க வேண்டும், சரி. எதற்காக இளமையில் சேமிக்க வேண்டும்? அருள் அற்றவனாகிய எமன் உடலில் இருந்து உயிரைப் பிறக்கும் தொழிலை இடைவிடாது செய்து வருபவன். அவனுடை அருளற்ற தன்மைக்கு சான்றாக ஒரு காட்சியை விவரிக்கின்றனர்: தன் வயிற்றில் இருந்து பெற்ற குழந்தையைக் காப்பாற்ற ஒரு தாய் கதறி அழுதாலும் இரக்கம் காட்டாமல் அந்த எமன் கூட்டிச் செல்வான். அப்பேற்பட்ட எமனிடம் இருந்து தப்பிக்க இயலாது. அதனால் காலம் இருக்கும் பொழுதே நல்ல செயல்கள் செய்வீராக என்று உணர்த்துகிறது இப்பாடல்.

பாடல்:

ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்
தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் - பீட்பிதுக்கிப்
பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன்
கள்ளம் கைபிடித்தல் நன்று.

அருஞ்சொற்பொருள்

உழலும் - அதே வேலையாத் திரிகின்ற
அருள் இல் கூற்று - இரக்கம் இல்லாத எமன்
தோள் கோப்பு - கட்டுச் சோறு போல் நற்செயல் கட்டு - தோளில் தூக்கிச் செல்லுதல்
காலத்தால் - இளமைக் காலத்திலேயே
கொண்டுய்ம்மின் - உண்டாக்கிப் பிழையுங்கள்
பீள் - குழந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக