திங்கள், 16 பிப்ரவரி, 2015

நாளும் ஒரு நாலடியார் : பாடல் 15


அது ஒரு நிழற்சாலை. அங்கு ஒரு பெண் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி காலார நடந்து வந்தாள். அவளது சிந்தனை சமீபத்தில் காலமாகிய தன் தாயைப் பற்றி இருந்தது. சிறார் பருவம் இளமைப் பருவம் முதுமைப் பருவம் தாண்டி இறந்த தன் தாய் மீண்டும் ஒரு தாயின் வயிற்றில் பிறப்பதற்கு தாய் தேடிப்போனதாக எண்ணினாள். தன் தாயின் தாயும் அவ்வாறே மற்றொரு தாய் தேடிப் போனாள். இது இயற்கையாக இவ்வுலகில் நடப்பது.

உலகில் சுழற்சி தன்மை கொண்ட நிகழ்வுகள் பல. கார் காலம், கோடை காலம், வசந்த காலம் என்று காலங்கள் சுழன்று கொண்டிருக்கின்றன. நாள், இரவு என்பது பூமியின் சுழற்சியினால் உண்டாவது. இவ்வகை சுழற்சிகளை கண்டதால்தானோ நம் முன்னோர் உயிர் சுழற்சி, அதாவது மறு பிறப்பிலும் நம்பிக்கை வைத்தனர்?

என்றும் நாம் இளமையுடன் இருப்பது என்பது இயலாத ஒன்று. அதனால் நல்ல சுகத்துடனும் உடல் நலத்துடனும் இருக்கும் பொழுதே நாம் நற்செயல்கள் செய்யவேண்டும் என்பது இப்பாடலின் உட்கருத்து.

பாடல்:

எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள் ;- தனக்குத்தாய்
ஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க்கொண்
டேகும் அளித்திவ் வுலகு.

அருஞ்சொற்பொருள்

ஏகும் அளித்து இவ்வுலகு - போகின்ற எளிமையையுடையது இந்த உலகம் என்க




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக